ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ம.பி. இடைத் தேர்தலில் வன்முறை: இரு இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு

மத்தியப் பிரதேசத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2017, 7:27 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மத்தியப் பிரதேசத்தில் அதேர், பாந்தவ்கர் ஆகி இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இங்கு பாஜக-காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதேர் தொகுதி பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதேர் தொகுதியில் வாக்குப் பதிவின்போது இரு இடங்களில் பாஜக-காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
நிலைமை கையை மீறிச் சென்றதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வன்முறைக் கும்பலைக் கலைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறை நிகழ்ந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், எந்த இடத்திலும் வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு மையத்தைக் கைப்பற்றவில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குள் சென்று நீண்ட நேரமாக அங்கேயே இருந்துள்ளார். இதற்கு பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது, இதுவே வன்முறையாக வெடித்தது என்று கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தலுக்கு முன்பு 6 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேர் தொகுதியில் 60 சதவீத வாக்குகளும், பாந்தவ்கர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.