டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது: விற்பனை மைய உரிமையாளர்கள் எச்சரிக்கை

டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தரக்கோரி, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை விடப் போவதாக பெட்ரோல்-டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:16 pm

DIN

டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தரக்கோரி, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை விடப் போவதாக பெட்ரோல்-டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பதாவது:
டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்திருந்தோம். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் அளித்த வாக்குறுதியை அடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றோம். எனினும், எண்ணெய் நிறுவனங்கள் வாக்குறுதி அளித்து 4 மாதங்களாகி விட்ட பிறகும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
எனவே, மே மாதம் 10-ஆம் தேதி முதல், எங்களது கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் வரையிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்துள்ளோம். அத்துடன், மே மாதம் 10-ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே பணிபுரிவதென்றும் தீர்மானித்துள்ளோம். மே மாதம் 10-ஆம் தேதியன்று, கொள்முதல் இல்லாத தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம் என்று பெட்ரோல்-டீசல் விற்பனை மைய கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.