28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலச் சட்டத் திருத்த மசோதாவுக்கு முட்டுக்கட்டை ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) நலச் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போடுவதற்கு காரணம் என்ன?

News image
ரதமர் மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள்.
Updated On :12 ஏப்ரல் 2017, 7:19 pm

DIN

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) நலச் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போடுவதற்கு காரணம் என்ன? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்.பி.க்களுடனான கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓபிசி நலச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி, தற்போது உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தைக் கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான நல ஆணையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு வகைசெய்யும் அம்சங்களுடன் அந்தச் சட்டத் திருத்தம் தயாரானது.
மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் மாநிலங்கள் புதிதாக எந்த ஜாதியையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இயலாத வகையில் சில அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என்பதே அந்தச் சட்டத் திருத்தத்தில் பிரதான அம்சமாக இருந்தது.
அந்தச் சட்டத் திருத்தமானது மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அந்தச் சட்டத் திருத்தம் செவ்வாய்க்கிழமை (ஏப்.11) அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் ஓபிசி நலச் சட்டத் திருத்தத்ததை நிறைவேற்றியதற்காக இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய மோடி, இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவரும், பாஜக பொதுச் செயலாளருமான பூபேந்திர யாதவ், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓபிசி நலச் சட்டத் திருத்தம், அந்த சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கக்கூடியது என்று கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டார். இதனை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் எதற்கு தடுத்து நிறுத்த வேண்டும்? என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி பிரிவினருக்கு சமூகத்தில் கூடுதல் அதிகாரமளிக்க முடியும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என பாஜக எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார்.
மாநிலங்களவையிலும் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார் என்றார் பூபேந்தர் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.