மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காஷ்மீர் முன்னாள் முதல்வரின் தலைக்கு ரூ.ஒரு லட்சம் விலை வைத்த பஜ்ரங் தள் தலைவர் !

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் ...

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 1:31 pm

DIN

லக்னோ: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. இவர் தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாகி உள்ளார். காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இவர் அவ்வப்பொழுது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.

ஆக்ரா மாவட்ட பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக உள்ளவர் கோவிந்த் பராஸ்கர். இவர் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டிருப்பது ராணுவ வீரர்களை அவமதிக்கின்ற செயலாகும். இதற்கு பஜ்ரங் தள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசிய நபர்களுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துலா பாதுகாப்பு வழங்கிறார். இது தேச விரோத செயலாகும், இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றவர், பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும்என கூறி உள்ளார்.

அவரது இந்த பேச்சு அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.