ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் இரண்டரை கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்த முயன்ற நபரை அவர்கள் கைது செய்தனர்.
மேலும், அந்த நபரிடம் இருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...