டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரிசி, கோதுமைக்கான மானியத்தை வழங்குவது யார்?

''நியாய விலைக் கடைகளில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான மானியத்தை மத்திய அரசே வழங்கி வருகிறது'' என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

DIN

''நியாய விலைக் கடைகளில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான மானியத்தை மத்திய அரசே வழங்கி வருகிறது'' என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நியாய விலைக் கடைகளில் கோதுமை மற்றும் அரிசி கிலோ ஒன்றுக்கு முறையே ரூ. 2 மற்றும் ரூ. 3 என்ற விலையில் வழங்கப்படுகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் இந்த உணவு தானியங்களுக்கான மொத்த மானியத்தையும் மத்திய அரசு வழங்கிவரும் நிலையில், இதற்கான நற்பெயரை மாநில அரசுகள் பெற்று வருகின்றன.
உண்மையில் கோதுமைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 22-ம், அரிசிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 29.64-ம் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும், நியாய விலைக் கடைகளில் அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்குண்டான சிறு அளவிலான மானியச் செலவை மட்டுமே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கின்றன.

மற்றபடி, வேறு எந்த மாநில அரசுகளும் உணவு தானியங்களுக்காக மானியங்களை வழங்குவதில்லை.

உணவு தானியங்களுக்காக மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்த விவரங்களை நியாய விலைக் கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இதுதொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தான் உணவு தானியங்களை கிலோவுக்கு ரூ. 2 அல்லது ரூ. 3 விலையில் வழங்குவதாக ஏழை, எளிய மக்கள் கருதுகின்றனர்.

உண்மையில், மத்திய அரசு தான் அதை வழங்கி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
உணவு தானியங்களுக்கான மானியமாக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.