ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சத்தீஸ்கர் தாக்குதலில் பலியான 4 தமிழக வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

DIN

சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில்  நேற்று மாலை மாவோயிச பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மத்திய சிறப்புக் காவல்படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.

மரணமடைந்த 25 பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன், தஞ்சாவூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் மதுரை மாவட்டம் பெரியப்பூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.