மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெரு நிறுவனங்களின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை: ஜேட்லி விளக்கம்

பெரு நிறுவனங்கள் பெற்ற கடனில் ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி அரசை

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN

பெரு நிறுவனங்கள் பெற்ற கடனில் ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி அரசை விமர்சிப்பவர்கள் முதலில் உண்மை நிலை அறிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றபோது காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்திர சிங் ஹூடா துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். பெரு நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயக் கடன்களை ரத்து செய்ய முன்வராதது ஏன்? என்று அவர் கேட்டார். அதற்கு ஜேட்லி அளித்த பதில்:
பொதுவாக கடனை ரத்து செய்வதும், தள்ளுபடி செய்வதும் சம்பந்தப்பட்ட வங்கிகள் எடுக்கும் நிர்வாகரீதியான முடிவாகும். கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து விவசாயக் கடன்களை ரத்து செய்யும் திட்டங்கள் எதையும் அரசு முன்னெடுக்கவில்லை. அதேவேளையில், பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவரை அவ்வாறு ஒரு ரூபாய் கூட அரசு கடன் தள்ளுபடி செய்யவில்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதற்கு முன்பாக உண்மை நிலவரத்தை அறிந்துகொண்டு பேச வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் வேளாண் கடன் மதிப்பு ரூ.62,307 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, போலி நிறுவனங்கள் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜேட்லி, அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.