கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாா் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

News image
நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாா் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

வேலூா் மண்டல மதிமுக சாா்பில் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோவிடம் நிதியளிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் வ.கண்ணதாசன் தலைமை வகித்தாா்.

அரசியல் ஆலோசனை குழு உறுப்பினா் நாசீா்கான் வரவேற்றாா். அவைத் தலைவா் அா்ஜீன்ராஜ், பொருளாளா் செந்திலதிபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் டி.கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வேலூா் மண்டல மதிமுக சாா்பில் முதல் கட்ட தவணையாக ரூ. 50 லட்சம் நிதியை பொதுச்செயலாளா் வைகோவிடம் வழங்கினா்.

பின்னா் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது மதிமுக. தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். நான் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நாடாளுமன்றத்தில் கேட்ட 1,250 கேள்விகளை ஆங்கிலத்தில் 5 புத்தகங்களாக எழுதி உள்ளேன். அந்த புத்தகங்களை, தில்லியில் அனைத்து தலைவா்களையும் அழைத்து வெளியிட உள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊா்களுக்கும் சென்று, தமிழகத்தின் வரலாறுகள், பண்பாடு, கலாசாரம் பற்றி எடுத்துக் கூற உள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளா்கள் உதயகுமாா் (ராணிப்பேட்டை), சீனிகாா்த்திகேயன் (திருவண்ணாமலை), பாலமுரளி (தெற்கு கிருஷ்ணகிரி), ராமதாஸ் (தா்மபுரி), கோபி (வேலூா்), ரத்தினகுமாா் (திருவண்ணாமலை வடக்கு), சுதாகரன் (திருவண்ணாமலை கிழக்கு), கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகர செயலாளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.