இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாதுகாப்பு அதிகாரி கைது (வீடியோ இணைப்பு)

புதுதில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதுகாப்பு அதிகாரி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:41 pm

DIN

புதுதில்லி:  புதுதில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதுகாப்பு அதிகாரி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுதில்லியில் உள்ள பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டல் ஏரோசிட்டி. இந்த ஓட்டலில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணியாற்றி வருபவர் பவான் தாகியா. இவரோடு இங்கு பணிபுரியும் பெண் ஊழியை ஒருவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று ஓட்டலில் தனது பிறந்தநாளினை கொண்டாடி உள்ளார்.

அப்பொழுது பவான் தாகியா அந்த பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து உள்ளார். அவர் உள்ளே சென்றதும்,அவருடன் விளையாட்டாகப் பேசுவது போல  அவருடைய சேலையை இழுத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவர் இவ்வாறு செய்யத்   துவங்கியதும், அறைக்குள் இருக்கும் மற்றொரு ஊழியர் அந்த பெண்ணிற்கு உதவுவதற்கு பதிலாக, அறையை விட்டு வெளியே செல்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது

முதலில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் பவான் தாகியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு எச்சரிக்கை கடிதம் மட்டும் கொடுக்கப்பட்டதாக நிர்வாகம் சார்பில் பெண் ஊழியரிடம் தெரிவிக்கபட்டுள்ளது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல குறிப்பிட்ட ஹோட்டலில் இரு ஆண்டுகளாக பணியாற்றிய சம்மந்தப்பட்ட பெண் ஊழியரை தற்பொழுது வேலையை விட்டு நீக்கி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்  பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் தற்பொழுது பவான் தாகியாவை கைது செய்துள்ளனர். 

விடியோ:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.