விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பட்டினியால் உயிரிழந்த 200 பசுக்கள்: சத்தீஷ்கார் பாரதிய ஜனதா தலைவர் கைது!

தன்னுடைய கோசாலையில் பட்டினியின் காரணமாக 200 பசுக்கள்  உயிரிழந்த சம்பவத்தில், சத்தீஷ்கார் மாநில பாரதிய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2017, 9:29 am

ராய்பூர்: தன்னுடைய கோசாலையில் பட்டினியின் காரணமாக 200 பசுக்கள் பசியால் உயிரிழந்த சம்பவத்தில், சத்தீஷ்கார் மாநில பாரதிய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டார்.

சத்தீஷ்கார் மாநில பாஜக தலைவர் ஹரிஷ் வர்மா. இவருக்கு துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் கோசாலை என்னும் பசு பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500 க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அதிக அளவிலான பசுக்கள் பசியாலும், மருத்துவ வசதியின்றியும் தொடர்ந்து இறந்து வருகின்றன என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது

கோசாலையில் இருக்கும் பெரும்பாலான மாடுகள் அனைத்தும் பசியினால் மெலிந்து காட்சியளிக்கிறது. மேலுமிங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் உயிருக்கு தினமும் பசுக்கள் போராடி உள்ளன. பசியின் காரணமாக 30 பசுக்கள் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் கோசாலையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் பசுக்கள் இறந்து வருகின்றன. இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட  பசுக்கள் உயிரிழந்து உள்ளன. இந்த சடலங்கள் கோசாலை அமைந்து உள்ள பகுதியிலே புதைக்கப்பட்டுள்ளதாக வருகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 'சத்தீஷ்கார் ராஜ்ய கவ் சேவா ஆயோக்' என்னும் அமைப்பு போலீஸில் புகார் செய்துள்ளது. விசாரணைக்குப் பிறகு ஹரிஷ் வர்மா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது:

கோசாலை உரிமையாளர் ஹரிஷ் வர்மாவை நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் மீது சத்தீஷ்கார் மாநில விவசாய கால்நடை பாதுகாப்பு சட்டம் -2004 பிரிவு 4 மற்றும் 6-ன் கீழும், விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 11-ன் கீழும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது கோசாலையில் 220 பசுக்களை பராமரிக்க முடியும். ஆனால் 650 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கோசாலை பராமரிப்புக்கு நிலுவையில் உள்ள ரூ. 10 லட்சத்தை வழங்கக் கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இதுவரை எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை என்று ஹரிஷ் வர்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.