கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற மத்திய அரசு பரிசீலனையா?: அருண் ஜேட்லி மறுப்பு

புதிய ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:43 pm

DIN

புதிய ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும், புதிய ரூ.200 நோட்டுகள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை ரிசர்வ் வங்கியே முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டதையடுத்து, புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த சூழலில், ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படலாம் என்று யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அப்போது, ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேட்லி, அதுபோன்ற பரிசீலனைகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.
அவர் மேலும் கூறுகையில், '200 ரூபாய் நோட்டுகளை எப்போது அச்சிடுவது, எப்போது வெளியிடுவது என்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கியே மேற்கொள்கிறது. எனவே, அந்த நோட்டுகள் வெளியிடப்படும் தேதியை ரிசர்வ் வங்கி அறிவிப்பதுதான் முறையானது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.