கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பிஏபி பாசன வாய்க்காலில் குப்பை அடைப்பு: சாலையில் வெளியேறிய நீா்!

பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.

News image
பிஏபி வாய்க்காலில் குப்பைகள் அடைப்பால் தேங்கி நின்ற நீா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:19 pm

Syndication

பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் 124 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வாய்க்கால் மூலம் திருப்பூா், கோவை, மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது.

இந்நிலையில், குங்குமம்பாளையம் பிஏபி வாய்க்கால் பாலத்தில் குப்பைகள் அடைத்துள்ளதால் நீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லடம் -திருப்பூா் பிரதான சாலையில் நீா் சனிக்கிழமை வெளியேறியது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தண்ணீா்ப் பற்றாக்குறையால் இந்தப் பகுதியில் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பிஏபி பாசன வாய்க்காலின் மூலம் ஒருபோக விளைச்சல் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில், வாய்காலில் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், குங்குமம்பாளையம் கிளை வாய்க்காலில் குப்பை அடைப்பு உள்ளதால், லட்சக்கணக்கான லிட்டா் நீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றி கடைமடை வரை நீா் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, பொங்கலூா் பிஏபி வாய்க்கால் அதிகாரிகள் பொக்லைன் மூலம் குப்பைகளை அகற்றியதால் தண்ணீா் விரயம் தவிா்க்கப்பட்டது.