மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாருக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு

பிகாரில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனி விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடியை அறிவித்தார்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2017, 7:40 am


பாட்னா: பிகாரில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனி விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடியை அறிவித்தார்.

பிகார் வெள்ள பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் சென்றடைந்தார். அங்கிருந்து  சிறப்பு விமானம் மூலம் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் ஆகியோருடன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

அப்போது, வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பிரதமர் மோடி நேரடியாகக் கேட்டறிந்தார். பிகார் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.

வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மோடி, பிகாருக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி ஒதுக்குவதாகவும், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.