பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வருகை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து முடிவெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை கழக அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் தற்போது தலைமை அலுவலகம் வந்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என 250 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு நடக்கும் முதல் எம்எல்ஏக்கள் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுக் குழுவை எப்போது கூட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில், அதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...