கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2ஜி வழக்கில் விரிவான தீர்ப்பு கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை: சி.பி.ஐ அறிவிப்பு! 

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விரிவான தீர்ப்பு கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2017, 8:14 am

புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விரிவான தீர்ப்பு கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 18 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதன்மூலம் சுமார் 7 ஆண்டு காலம் நடைபெற்று வந்த இவ்வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 

தீர்ப்பு தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள், 'விரிவான தீர்ப்புகாக நாங்கள் காத்திருக்கிறோம். கிடைத்தவுடன் அதுகுறித்து ஆலோசித்து,  சட்டப்பூர்வமாக அடுதது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

இதேபோல அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறும் பொழுது, 'உயர் அதிகாரிகளுடன் முறையாக ஆலோசித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.