தில்லியில் அடர் பனிமூட்டம்: பல்வேறு ரயில்கள் சேவை ரத்து; விமானங்கள் தாமதம்

தலைநகர் தில்லியில் இன்று செவ்வாய்கிழமை காலையில் குளிரின் தாக்கம் அதிகரித்தது. குளிர் காற்றும் வீசி வருகிறது. மோசமான வானிலை
Updated on
1 min read

புதுதில்லி: தலைநகர் தில்லியில் இன்று காலை குளிரின் தாக்கம் அதிகரித்தது. மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் காலதாமதமாக வந்து சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 7 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 9 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டும் 21 ரயில்கள் காலதாமதமாக வந்து சென்று இருக்கின்றன.
மேலும், 4 உள்நாட்டு மற்றும் 3 சர்வதேச விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வந்தன.
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com