கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புனித யாத்திரையின் பொழுது சினிமா பாடல்களுக்கு 'தடா' போட்ட உ.பி முதல்வர்! 

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் துவங்கவுள்ள “கன்வாரியா யாத்ரா” என்ற புனித யாத்திரையின் பொழுது, சினிமாப் பாடல்களை ஒலிப்பதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:20 pm

DIN

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் துவங்கவுள்ள “கன்வாரியா யாத்ரா” என்ற புனித யாத்திரையின் பொழுது, சினிமாப் பாடல்களை ஒலிப்பதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் சிவ பக்தர்கள் விரதம் இருந்து காலையில் கங்கையில் இருந்து நீர் எடுத்துச் சென்று, நடைபயணமாக சிவன் கோவில்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதற்கு “கன்வாரியா யாத்ரா”  என்று பெயர். இந்த புனித யாத்திரை அநேக வடமாநிலங்களில் நடைபெறுகிறது. 

இம்முறை இந்த யாத்திரையை ஆம்மாநில முதல்வரான ஆதித்யநாத்தும் மேற்கொள்ள இருக்கிறார்.   அதற்கான ஏற்பாடுகளில் அரசு நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்று உள்ளது.

இந்த ஆலோசனையின் பொழுது யாத்திரை செல்லும் போது சினிமா பாடல்கள் மற்றும் ஆபாச பாடல்கள் ஒலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இத்தகைய ஆன்மீக யாத்திரைகளில் பஜனை பாடல்கள் மட்டுமே கேட்கவேண்டும், அதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

அவரது இந்த உத்தரவு குறித்து அங்கே தற்பொழுது வேறுபட்ட கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.