மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பழங்கால வைரங்கள் திருட்டு!

உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில், சிலை ஒன்றின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற பழங்கால வைரங்கள் திருட்டுப் போயுள்ளதாக உச்சநீதிமன்றத்தல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2017, 12:14 pm

DIN

புதுதில்லி: உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில், சிலை ஒன்றின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற பழங்கால வைரங்கள் திருட்டுப் போயுள்ளதாக உச்சநீதிமன்றத்தல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பத்மநாபசுவாமி கோயில். உலகின் பணக்கார இந்துக்  கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோவிலில் ரகசிய அறைகளில் குவிந்திருக்கும் தங்க, வைர மற்றும் பல்வேறு விதமான வளங்களின் மொத்த மதிப்பு இன்று வரை கணக்கிடப்படவில்லை.  இருந்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2010-ஆம் ஆண்டு ஒரு நிலவறையினைத் திறந்து நடத்தப்பட்ட சோதனையின் படி, கோயில் பொக்கிஷங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

முன்னதாக இத்தனை மதிப்புமிக்க சொத்துக்களையுடைய இந்த் கோவில் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்று 2009-ஆம் ஆண்டு கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை, இந்த வழக்கில் தனக்கு உதவுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.அதன்படியே 2010-இல் சோதனை நடத்தப்பட்டது. 

பின்னர் கடந்த வருடம் அப்பொழுதைய மத்திய தலைமைக் கணக்காளர் வினோத் ராயின் சோதனையின் பொழுது, ரூ.189 கோடி மதிப்புடைய   தங்கத்தினை காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்பொழுது அங்குள்ள சிலையொன்றின் முன் நெற்றியில் உள்ள 'நாமத்தில்' பொருத்தப்பட்டிருந்த பழம்பெரும் வைரங்கள் எட்டினைக்  காணவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படை மதிப்பாக ரூ.21 லட்சம் என்று கூறப்பட்டாலும், அதன் பழங்காலத்து தன்மை காரணமாக விலைமதிக்க முடியாதது என்று கூறப்படுகிறது.

இந்த திருட்டு குறித்து கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த தகவலை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு நாளை (செவ்வாய்க்கு கிழமை) விசாரணைக்கு வருகிறது      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.