மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

DIN

புதுதில்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்பொழுது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் சைதியின் பதவிக்காலம் வரும் 8-ஆம் தேதியோடு முடிவடைகிறதது. எனவே அவருக்குப் பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த குமார், 1975-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானவராவார்.

இவர் குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவராவார். குமார் வரும் 9-ஆம் தேதியன்று பதவி ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.