இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சட்டப்பேரவை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது: மத்திய அரசு

சட்டப்பேரவை விவகாரத்தில் அரசியல் சாசனப்படி நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:24 pm

DIN


புது தில்லி: சட்டப்பேரவை விவகாரத்தில் அரசியல் சாசனப்படி நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனை அளிக்க மத்திய தலைமை வழக்குரைஞரின் உதவியை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவை சபாநாயகரின் உரிமை என்ன, அவருக்குள்ள அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உதவியைக் கோரியிருந்த நிலையில், மத்திய கூடுதல் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால், தான் ஏற்கனவே இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆலோசனை வழங்கி வருவதால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவ முடியாது என்று மறுத்திருந்தார்.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட உதவி வழங்க கூடுதல் தலைமை வழக்குரைஞர் ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்தார். அப்போது, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அரசியல் சாசனப் பிரிவு 212ன் படி பேரவை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், மாஃபா பாண்டியராஜன்  தொடர்ந்த வழக்கில், சட்ட உதவி வழங்க கூடுதல் தலைமை வழக்குரைஞர் ரஞ்சித்குமார் 2 வார கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.