ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிரதமர் மோடியுடன் அமரீந்தர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநிலத்தில்

News image
Updated On :11 ஜூலை 2017, 11:09 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநிலத்தில் தொழில் துறையை மேம்படுத்தவும், வேளாண் நெருக்கடியைச் சமாளிக்கவும் ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியை அமரீந்தர் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
பஞ்சாபில் வேளாண் நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதுடன், வேலைவாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த தொழில்துறை வளர்ச்சிக்கும் ஆதரவளிக்குமாறு பிரதமர் மோடியிடம் அமரீந்தர் வலியுறுத்தினார்.
பஞ்சாப்புக்கு ரூ.31ஆயிரம் கோடி கடன் உள்ளது. அப்பிரச்னையை தாங்கள் தலையிட்டு தீர்க்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
மேலும், மாநிலத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகவும், பஞ்சாப் காவல் துறையுடன் மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் விசாரணை அமைப்புகளும் இணைந்து அதை முறியடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் அமரீந்தர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.