ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பயங்கரவாதத்துக்கு மோடியே காரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஜம்மு-காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணியால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் அரசியல் லாபத்துக்காக, இந்தியாவே பெரும் விலை கொடுக்க நேரிட்டிருக்கிறது.
இதற்காக பல அப்பாவி இந்தியர்கள் உயிர்த் தியாகம் செய்து வருகின்றனர்.
மோடியின் தவறான கொள்கைகள் காரணமாகவே, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவு உத்திகளின் தோல்வியும், அப்பாவி இந்தியர்களின் ரத்தமும் இணைவதால் மட்டுமே மோடிக்கு அரசியல் லாபம் கிடைத்து வருகிறது என தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.