பயங்கரவாதத்துக்கு மோடியே காரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஜம்மு-காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணியால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் அரசியல் லாபத்துக்காக, இந்தியாவே பெரும் விலை கொடுக்க நேரிட்டிருக்கிறது.
இதற்காக பல அப்பாவி இந்தியர்கள் உயிர்த் தியாகம் செய்து வருகின்றனர்.
மோடியின் தவறான கொள்கைகள் காரணமாகவே, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவு உத்திகளின் தோல்வியும், அப்பாவி இந்தியர்களின் ரத்தமும் இணைவதால் மட்டுமே மோடிக்கு அரசியல் லாபம் கிடைத்து வருகிறது என தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...