வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

விரைவில் நாடு முழுவதும் 2 அடுக்கு சொகுசுப் பேருந்துகள் அறிமுகம்

 நாடு முழுவதும் இரண்டு அடுக்கு சொகுசுப் பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

DIN

 நாடு முழுவதும் இரண்டு அடுக்கு சொகுசுப் பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
நாட்டில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபாடு பல மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், இவற்றின் எரிபொருள் தேவையை சமாளிக்க, வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ரூ.7 லட்சம் கோடி செலவில் பெட்ரோல், டீசலை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
எனவே, பெட்ரோல், டீசல் அல்லாத மாற்று எரிபொருள்களில் இயங்கக் கூடிய வாகனங்களை தயாரிப்பதும், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதுமே நாட்டின் தற்போதைய அத்தியாவசியத் தேவை.
அந்த வகையில், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அரசுப் பேருந்து போக்குவரத்தினை முற்றிலுமாக சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, நாடு முழுவதும் விரைவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட சொகுசுப் பேருந்துகளை அறிமுகம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, இந்த சொகுசுப் பேருந்துகளை தில்லி - மும்பை, தில்லி - ஜெய்ப்பூர், தில்லி - லூதியானா மார்க்கங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தப் பேருந்துகள் மாற்று எரிபொருளில் இயங்கக் கூடியது என்பதால் அவற்றின் பயணக் கட்டணங்கள் தற்போது இருப்பதை விட குறைவாக இருக்கும்.
இதுபோன்ற பேருந்துகளை மெத்தனால் எரிபொருள் மூலமாக இயக்குவதற்கு "வால்வோ' நிறுவனம் தயாராக உள்ளது.
இதுதவிர, மின்சாரத்தால் இயங்கக்கூடிய லாரிகளையும், பேருந்துகளையும் தயாரிப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது என்றார் நிதின் கட்கரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.