மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எல்லையில் அத்துமீறினால் உரிய பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழுஉரிமை உண்டு என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:27 pm

DIN

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழுஉரிமை உண்டு என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜெளரி மாவட்ட எல்லையில் திங்கள்கிழமை பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் (டிஜிஎம்ஒ) லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட், பாகிஸ்தான் டிஜிஎம்ஒ ஆகியோர் தொலைபேசியில் பேசினர்.
அப்போது, எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் தெரிவித்தார். சுமார் 10 நிமிடங்கள் வரை இரு அதிகாரிகளும் பேசினர் என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகளின் தொலைபேசி பேச்சு குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஆனந்த் கூறியதாவது:
பாகிஸ்தான் கமாண்டர் மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். மிர்ஷா முதலில் பேச்சைத் தொடங்கினார். அப்போது, கடந்த வாரம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஆனால், பாகிஸ்தான் தரப்புதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இந்தியா அதற்கு பதிலடி கொடுப்பதாகவும் இந்திய அதிகாரி குற்றம்சாட்டினார். 'மேலு'ம், எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்றும் இந்திய ராணுவ அதிகாரி குறை கூறினார் என்றார் அவர்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 23 முறை இந்தியப் பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு முறை ஊடுருவல் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியத் தரப்பில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.