இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இரு கால்கள் கொண்ட அதிசயப் பாம்பு

தெலங்கானாவில் விவசாய நிலம் ஒன்றில் பிடிபட்ட பாம்புக்கு இரு கால்கள் இருந்தன .

News image
Updated On :20 ஜூன் 2017, 5:04 am

DIN

தெலங்கானாவில் விவசாய நிலம் ஒன்றில் பிடிபட்ட பாம்புக்கு இரு கால்கள் இருந்தன. தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் வசிப்பவர் ராமுலு. இவரது விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பாம்பு பிடிபட்டது.

அதன் உடல் நடுவில் இரு கால்களும், அதில் 8 கூரிய நகங்களும் இருந்தது தெரியவந்தது. இந்த அரிய வகை பாம்பை ராமுலு, மாவட்ட வனத்துறை அதிகாரி ராம்பாபுவிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து ராம்பாபு கூறுகையில், ' இது போன்ற பாம்புகள் பல்லாண்டுகளுக்கு முன் இருந்தன. இதுகுறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த பாம்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். இரு கால்கள் கொண்ட அதிசய பாம்பை அக்கிராம மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.