மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி (82), பிகார் ஆளுநராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பை ஏற்றார்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் பதவியை பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி, பிகார் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கூடுதல் பொறுப்பை ஏற்பதற்காக திரிபாடி புதன்கிழமை பாட்னாô வந்தார். அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அவருக்கு பிகார் ஆளுநராக பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் சௌதரி உள்ளிட்டோர்ஸ கலந்து கொண்டனர்.
கேசரிநாத் திரிபாடி ஏற்கெனவே பிகார் ஆளுநர் பொறுப்பை கடந்த 2014 நவம்பர் 27 முதல் 2015 ஆகஸ்ட் 15 வரை கூடுதலாகக் கவனித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


