எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு ஜேட்லி கண்டனம்!

நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜூன் 2017, 12:55 pm

DIN

புதுதில்லி: நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் முதல் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான நிகழ்வு நாளை இரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மமதா பானர்ஜி முன்பே அறிவித்து விட்டார். அவரைப் போன்றே இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்று அறிவித்தன.

இதற்கு மத்திய நிதியமைச்சர் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிச்சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை கட்சிகள் புறக்கணிப்பது சரியான செய்கை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.