சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட 'சூப்பர்சோனிக் இன்டர்செப்டார்' ரக ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காக ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:07 am

DIN

புதுதில்லி: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட 'சூப்பர்சோனிக் இன்டர்செப்டார்' ரக ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காக விஞ்ஞானிகளுக்கு  பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ராணுவ வலிமையை வெகுவாக அதிகரிக்க இந்தியா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வுகளை பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் பல்வேறு ஆயுதங்களை தயாரித்து, சோதனை நடத்துவதன் மூலம் வெற்றி கண்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தாக்கும் திறனுள்ள சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணையின் பயன்பாட்டு சோதனை  நேற்று நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு நேற்று வெளியிட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு  விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது டிவிட்டர் செய்தியில், 'இத்தகைய வல்லம கொண்ட ஏவுகணையை வைத்திருக்கும் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து இருப்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை அளிக்கும் விஷயம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.