தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நொய்டாவில் பயங்கரம்: இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிப்பு

நெய்டாவில் மருத்துவரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

file photo

Updated On :2 மார்ச் 2017, 6:51 am


நெய்டாவில் மருத்துவரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

புகாரின் அடிப்படையில், இறுதிச் சடங்கின் போது பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவர் எரிக்கப்பட்ட போது உயிருடன் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், கிரேட்டர் நெய்டாவில் உள்ள ஷாரதா மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண், ஞாயிறன்று மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 8 மணி நேரம் கழித்து இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

இந்த மரணம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் சகோதரர், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், 70 சதவீதம் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், அப்பெண்ணின் நுரையீரலில் சாம்பல் துகள் இருந்ததாகவும், எரியூட்டப்பட்ட போது அவர் உயிருடன்தான் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை கிடைத்ததும், அப்பெண்ணின் உறவினர்கள், கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவானதைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புலந்ஷஹர் பகுதியைச் சேர்ந்த அப்பெண், 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு நொய்டாவில் வசித்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.