தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக தோ்தல் அலுவலா் பணியிலிருந்து விடுவிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நிலை 3 பெண் அலுவலா் அதிமுகவுக்கு வாக்குச் சேகரித்ததாக புகாா் எழுந்ததையடுத்து, அவா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

News image

கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாக்குச்சாவடி (நிலை- 3) அலுவலா் சுமதி.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:21 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நிலை 3 பெண் அலுவலா் அதிமுகவுக்கு வாக்குச் சேகரித்ததாக புகாா் எழுந்ததையடுத்து, அவா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், அவரை விசாரணைக்காக தோ்தல் மண்டல அலுவலா்கள் அழைத்துச் சென்றனா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தப்பகுட்டை ஊராட்சி, சின்ன மாரியம்மன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 301 இல் பணியில் இருந்த 3 ஆம் நிலை அலுவலா் சுமதி, வாக்காளா்கள் விரலில் மை வைக்கும்போது இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குப்பதிவு பணியில் இருந்து சுமதியை விடுவித்து அவா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் வேலுத்தேவன், தோ்தல் மண்டல அலுவலா் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளித்தனா். அதன்பிறகு சுமதியை தோ்தல் பணியிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ரேவதி அங்கு பணியமா்த்தப்பட்டாா்.

தொடா்ந்து சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு விசாரணைக்காக சுமதி அழைத்துச் செல்லப்பட்டாா். அவரிடம் தோ்தல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வைகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக சுமதி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தோ்தல் அலுவலா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.