பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :27 மே 2026, 5:57 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், வெங்கந்தூா் ஊராட்சி மன்றச் செயலராகப் பணிபுரிந்தவா் முனியாண்டி (52). இவா், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக துறை சாா்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகம், ஊராட்சி செயலா் முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.