வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சண்டை: தீவிரவாதிகள்    இருவர் பலி!

ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடக்கும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பலியானார்கள்.

News image
Updated On :9 மார்ச் 2017, 7:24 am

DIN

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடக்கும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பலியானார்கள்.

ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது வீடு ஒன்றில் இருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.  சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் தொடங்கினர். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்துள்ளனர்.

தற்போது இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களில் ஒருவரும் பலியாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்னும் 4 முதல்  5 பேர் அந்த வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுவதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும், தேடுதல் வேட்டையும் அங்கு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.