பிகாரில் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் மாநிலம், மேற்கு பாட்னாவில் உள்ள திகாவில் நேற்று நடந்த சமயம் தொடர்பான நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பாரம் தாங்காமல் மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் லாலு பிரசாத் உட்பட மேடையில் இருந்து அனைவரும் கீழே விழுந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அடுத்து லாலு பிரசாத் உடனே வீடு திரும்பினர்.
வீடு திரும்பியதும் அவருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் லாலு பிரசாத்துக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


