ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜிஎஸ்டி துணை மசோதாக்கள்: மக்களவையில் இன்று தாக்கல்?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை அமல்படுத்துவதற்குத் தேவையான நான்கு துணை மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:19 am

தினமணி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை அமல்படுத்துவதற்குத் தேவையான நான்கு துணை மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
ஜிஎஸ்டி வரி முறையை வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஈட்டுறுதிச் சட்டம், மத்திய ஜிஎஸ்டி (சி-ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யு-ஜிஎஸ்டி) ஆகிய நான்கு முக்கிய துணை மசோதாக்களை மத்திய அரசு திங்கள்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாக்கள் மீது எவ்வளவு நேரம் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்ய, நாடாளுமன்ற நடவடிக்கை ஆலோசனைக் குழுவும் அதே நாளில் கூடும் என்று கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் அந்த மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அங்கு அந்த மசோதாவில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால், மீண்டும் மக்களவையில் அதுகுறித்து விவாதிக்கப்படும்.
ஏற்கெனவே, இந்த நான்கு துணை மசோதாக்களுக்கும், மாநில ஜிஎஸ்டி (எஸ்-ஜிஎஸ்டி) துணை மசோதாவுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்-ஜிஎஸ்டி துணை மசோதாவைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் ஈட்டுறுதிச் சட்டம், சி-ஜிஎஸ்டி, ஐ-ஜிஎஸ்டி, யு-ஜிஎஸ்டி ஆகிய நான்கு துணை மசோதாக்களும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்தான், ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகப்படுத்த முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர், அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.