சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து!
மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


புதுதில்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு தான் வழங்கும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வருகிறது. தற்போது அலைபேசி சிம் கார்டு வாங்குவதற்கு, ஓட்டுநர் உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆதார் எண் அவசியமாகிவருகிறது.
இவ்வாறு மத்திய அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞரான ஷ்யாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.எஸ்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள், 'மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நல திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை' என்று கருத்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...