மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அடுத்த ஜனாதிபதி போட்டியில் நானா? ஆர்.எஸ்.எஸ் தலைவரின் 'அடடே' பதில்!

இந்தியாவுக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் போட்டியில் தன்னுடைய பெயர் இருப்பதாக வெளியான தகவலை ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:20 am

தினமணி

நாக்பூர்: இந்தியாவுக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் போட்டியில் தன்னுடைய பெயர் இருப்பதாக வெளியான தகவலை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதியாக மறுத்துள்ளார்.

பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பாகச் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்.இதன் தலைவராக இருப்பவர் மோகன் பகவத். தற்போதைய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் பதிவிக்காலம் வரும் ஜுலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அடுத்த ஜனாதிபதி யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் சிவ சேனா கட்சியின் எம்.பியான சஞ்சய் ராவத் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பொழுது, அடுத்த ஜனாதிபதி பதவிக்கு பகவத்தின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது என்றும், அவர் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இதுகுறித்த தனது நிலையை தெளிவுபடுத்தியிருந்தார்.  

ஜனாதிபதி  தேர்வுக்கு என்னுடைய பெயர் பரிந்துரைக்கபபடவே இல்லை. அப்படியே  பரிந்துரைக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்பதாக இல்லை. ஊடங்களில் வெளிவருவது  எல்லாம் வெறும் கேளிக்கை செய்தி.

சங் பரிவார் அமைப்பின் ஒரு உறுப்பினராக என் அமைப்பிற்காகவும், சமூகத்திற்காகவும் என்னுடைய வாழ்க்கையை அர்பணித்துள்ளேன்,.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளாருக்கு ஆதரவு கோரி, கூட்டணி எம்.பிக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி இன்றிரவு விருந்தளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.