ரூ.4.41 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் 8 பேர் கைது
ஹைதராபாதில் ரூ.4.41 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


ஹைதராபாத்: ஹைதராபாதில் ரூ.4.41 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோடிக்கணக்கான மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்ற ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக, தகவல் கிடைத்ததை அடுத்து, ஹைதராபாதின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4.41 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வீட்டில் இருந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, ஹைதராபாதில் இதுவரை ரூ.9 கோடிக்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனினும், இப்போதுதான் ஒரே நேரத்தில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்ததாக இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...