டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிபிஐ மூலம் திரிணமூல் காங்கிரஸை பணிய வைக்க பாஜக முயற்சி

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தி வைத்திருப்பதற்கு பாஜக முயன்று வருகிறது

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தி வைத்திருப்பதற்கு பாஜக முயன்று வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொருவரையும் மிரட்டி வைத்திருப்பதற்கு பாஜக முயன்று வருகிறது. மக்கள் நலனுக்கு ஆதரவாகவும், பாஜகவின் கொள்கைகளை விமர்சித்து நாங்கள் பேசி வருவதால், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எங்களை பாஜக அச்சுறுத்தி வருகிறது.
நாரதா விடியோ விவகாரத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள் என 12 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. நான் உள்பட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் அவர்கள் (பாஜக) கைது செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எதிராகப் பேசுவதைத் தடுக்க முடியாது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அண்மையில் மேற்கு வங்கத்துக்கு வந்திருந்தார். மேற்கு வங்கத்தின் கலாசாரம், அறம் ஆகியவை குறித்து பாஜகவினர் நமக்கு கற்றுக் கொடுக்க முயலுகின்றனர்.
ஹிந்துயிஸம், பிறரை வெறுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும்தான் போதிக்கிறது.
நான் ஒரு ஹிந்து. நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன், அனைவரிடத்திலும் அன்பு செலுத்துகிறேன். மதத்தின் பெயரால் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதை சகித்துக் கொள்ள முடியாது என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.