டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் கடந்த பல மாதங்களாக பொறுப்பு ஆளுநர்களே உள்ளனர். மேலும், ஆந்திரம், தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள இ.எஸ்.எல். நரசிம்மன் கடந்த 2 ஆண்டுகளாக பதவி நீட்டிப்பில் உள்ளார்.
இந்நிலையில், 5 மாநிலங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, மகாராஷ்டிர ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதேபோல, மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பை குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலியும், மேகாலய ஆளுநர் பொறுப்பை அஸ்ஸாம் ஆளுநர் பன்வாரிலாலும், அருணாசலப் பிரதேச ஆளுநர் பொறுப்பை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யாவும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.