மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாட்டுத்தீவன ஊழல்: எஞ்சியுள்ள வழக்குகளிலும் லாலுவிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ரூ.950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்ற மாட்டுத்தீவன கொள்முதல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான எஞ்சிய வழக்குகளை...

News image
Updated On :8 மே 2017, 6:46 am

DIN

புதுடில்லி: ரூ.950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்ற மாட்டுத்தீவன கொள்முதல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான எஞ்சிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 1990-97 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த பொழுது மாட்டுத்தீவன கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக லாலுபிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் மொத்தம் பதிவு செய்ப்பட்ட 64 வழக்குகளில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்ச நீதி மன்றம் இன்று வழங்கியது. அதில் லாலு மீதான குற்றச்சதியை ரத்து செய்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,  எஞ்சியுள்ள நான்கு வழக்குகளிலும் லாலு மீது மீண்டும் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு லாலுவுக்கு அரசியல் ரீதியிலாக பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.