டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை 

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:33 pm

DIN

புதுதில்லி:  இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு சற்று முன் தீர்ப்பை வாசித்தனர்.

அதன்படி குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்தியாவின் மனு சர்வதேச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார். ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து அந்த நீதிமன்றத்தில், பாகிஸ்தான் சார்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி முகமது ஃபைசல் முன்வைத்த வாதத்தில் இந்தியா மனுத் தாக்கல் செய்துள்ளது தேவையற்றது. விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளத் தவறியதால்தான் அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தை அரசியல் நாடகம் நடத்தும் இடமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஆனால், நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். ஜாதவின் கடவுச்சீட்டில் ஒரு முஸ்லிமின் பெயர் இடம்பெற்றுள்ளது தொடர்பாக இந்தியாவால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை என்று அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்பை வழங்கியது.

அதன்படி குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் வாதங்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.