மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்ட முன்வரைவு: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்! 

இஸ்லாமியர்களின் விவகாரத்து நடைமுறையான முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வரைவினை, வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு.. 

News image
Updated On :21 நவம்பர் 2017, 12:03 pm

DIN

புதுதில்லி: இஸ்லாமியர்களின் விவகாரத்து நடைமுறையான முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வரைவினை, வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

திருமணம் ஆன இஸ்லாமிய ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு மூன்று முறை தலாக் கூறும் முத்தலாக் நடை முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இது தவறான நடைமுறை என்று கூறி, உச்ச நீதாய்நிற்றத்தில் முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது; செல்லத்தக்கது அல்ல என்று ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

மேலும் இது தொடர்பாக உச்ச நீதின்றம் கூறியதாவது:

முத்தலாக் நடைமுறை தவறானதாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கான இந்த தனிச்சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆறு மாதங்களுக்கு இந்த  நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன், முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றவேண்டும். இந்த சட்டமானது இஸ்லாமிய ஷரியத் சட்டத்தையும் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமையவேண்டும்

ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்றால் அரசாங்கம் சட்டத்தை இயற்றும் வரை முத்தலாக் மீதான தடை தொடரும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது

இந்நிலையில் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வரைவினை, வரவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.