ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மகாராஷ்டிரம்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மகாராஷ்டிரத்தில் 4 மாநகராட்சிகளின் சில வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:13 pm

DIN

மகாராஷ்டிரத்தில் 4 மாநகராட்சிகளின் சில வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது.
மும்பை, புணே, கோலாபூர், நாகபுரி ஆகிய 4 மாநகராட்சிகளின் சில வார்டுகளுக்கு புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கோலாபூர் மாநகராட்சியில் மட்டும் பாஜகவின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. 
வாக்கு முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பை மாநகராட்சியின் 116-ஆவது வார்டில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனை கட்சியின் வேட்பாளர் மீனாட்சி பாட்டீலை காட்டிலும், 11,129 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ஜக்ருதி பாட்டீல் வெற்றி பெற்றார். நாகபுரி மாநகராட்சியின் 35-ஏ வார்டில் பாஜகவின் சந்தீப் கவாய், புணே மாநகராட்சியின் 21-ஏ வார்டில் ஹிமலி நவ்நாத் காம்ப்லே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கேலாபூரில் 11-ஆவது வார்டில் ரத்னேஷ் ஷிதோல்கர் வெற்றி பெற்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.