நக்ஸல்கள் சரணடைவதற்கான காலவரம்பை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மகாராஷ்டிர அரசு நீட்டித்துள்ளது. மகாராஷ்டிர அரசு, நக்ஸல்கள் சரணடைவதற்கான திட்டத்தை கடந்த 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் காவல் நிலையங்களில் சரணடையும் நக்ஸல்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். இந்நிலையில், நக்ஸல்கள் சரணடைவதற்கான காலவரம்பை நீட்டிக்கக் கோரி மகாராஷ்டிர காவல் துறை இயக்குநர் சதீஷ் மாத்தூர், மாநில உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதை பரிசீலித்த மாநில உள்துறை அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.