இப்போது புதிய பிரச்னையாக சிறுமி திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருப்பதால் கிராமத்திற்கு தீட்டு பட்டுவிட்டதாகவும், அதனால் சுத்திகரிப்பு சடங்கு செய்யக் கூறி கிராம மக்கள் வற்புறுத்தி வருகிறார்கள். சிறுமியின் தந்தையோ “நான் ஒரு கூலி தொழிலாளி, என் மகளின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பிள்ளை பேறுக்கும் நான் செலவு செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையில் நான் எப்படி ரூ.30,000 செலவு செய்து சடங்கு செய்ய முடியும்?” என்று கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார். கிராம மக்கள் சடங்கு செய்யாததால் தன்னையும், தனது குடும்பத்தையும் ஒதுக்குகிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.