விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆதிவாசிப் பெண்ணை ஏழு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்த மத்திய படை வீரர்கள்! (விடியோ இணைப்பு) 

காய்ச்சலில் நடக்க இயலாமல் அவதிப்பட்ட ஆதிவாசிப் பெண்ணை, சிகிச்சைக்காக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு கிலோமீட்டர்கள் தூரம் தோளில் சுமந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 9:45 am

ராய்பூர்: காய்ச்சலில் நடக்க இயலாமல் அவதிப்பட்ட ஆதிவாசிப் பெண்ணை, சிகிச்சைக்காக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு கிலோமீட்டர்கள் தூரம் தோளில் சுமந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் பொதுவாகவே நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே இங்கு அதிக அளவில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருப்பார்கள். மக்களுக்கு வசதிகள் குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் அடர்ந்த வனப் பகுதியில் வசித்து வந்த ஆதிவாசிப் பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாகனங்களும் அந்தப் பகுதியில் செல்ல முடியாது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அந்தப் பெண்ணை தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ரெச்சர் ஒன்றில்  வைத்து, தோளில் சுமந்து நடந்து, அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொண்டு சேர்த்தனர்.

மத்திய பாதுகாப்பு படையினரின் இந்த மனிதநேயம் மிக்க இந்த செயலானதுஅனைவராலும் பரவலாக பாராட்டப்படுகிறது.

விடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.