டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நிர்மலா சீதாராமனுடன் தருண் விஜய் சந்திப்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினரும், திருவள்ளுவருக்கான மாணவர், இளையோர் அமைப்பின்

News image
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பேரரசர் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை வழங்கிய தருண் விஜய்.
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

DIN

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினரும், திருவள்ளுவருக்கான மாணவர், இளையோர் அமைப்பின் தலைவருமான தருண் விஜய் புதன்கிழமை நேரில் சந்தித்தார். 
புது தில்லி சௌத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் அவரை சந்தித்து கப்பலுடன்கூடிய பேரரசர் ராஜேந்திர சோழனின் திருவுருவப் படத்தை தருண் விஜய் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். 
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: 
தமிழகத்தின் ராஜராஜ சோழனின் வாரிசான பேரரசர் ராஜேந்திர சோழன், இந்திய கடல் பகுதியில் வலிமைமிக்க கப்பல் படையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிய பெருமைக்குரியவர். வட இந்தியாவில் கங்கை கரை வரை தனது ஆதிக்கத்தைச் செலுத்தியவர். அவரது பெருமையைப் போற்றும் வகையில் ராஜேந்திர சோழனின் புத்தாயிரம் இந்திய கடற்படையால் கொண்டாடப்பட்டது. இந்திய அரசு அவரது பெயரில் அஞ்சல் தலையும் வெளியிட்டது.
ராஜேந்திர சோழனின் திருவுருப்படத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கியிருப்பது ராஜேந்திர சோழர் காலத்தில் இருந்து வரும் கடற்படை கப்பல்களின் பலத்தை காட்டுவதாக உள்ளது. 
இந்தியாவை உருவாக்க உதவிய மகத்தான ராணுவ வலிமையை நாம் மறக்கக் கூடாது. தென் இந்தியாவின் ராணுவ வலிமை நீண்டகாலம் புறக்கணிக்கப்பட்டது. 
பிரதமர் மோடியின் காலத்தில்தான் தென்னிந்தியாவின் புகழும், வலிமையும் கௌரவிக்கப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாததைவிட மரியாதையும் அளிக்கப்பட்டுள்ளது என்றார் தருண் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.