இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி20 12-வது மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, புகைப்படங்களில் இடம்பெறுவதற்காகத்தான் ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டார்.
அங்கு நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பங்கேற்று சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நாகாலந்து தலைவர்களுடன் மோடியால் பேச முடிகிறது என்றால், ஏன் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச முடிவதில்லை.
பாஸ்டரில் பல காலமாக இருக்கும் நக்ஸல் பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முடிவதில்லை. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதை பதிவிடுவதற்காகவே மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்றார் என்று குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, அதிகாரப்பூர்வமற்ற ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நலம் விசாரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பகிரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


