விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பத்ம விருதுகளுக்கு இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்

வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கலைஞர்கள், நிபுணர்கள், வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் பத்ம விருதுகளுக்கு 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

News image
Updated On :8 ஜூலை 2017, 5:25 am


புது தில்லி: வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கலைஞர்கள், நிபுணர்கள், வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் பத்ம விருதுகளுக்கு 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குடியரசுத் தின விழாவுக்கு முன்கூட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். 

வரும் 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 30ம்தேதி வரை பத்ம விருதுகளுக்காக 2,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2017ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியாகும். 

2016ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு 18,761 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விருதுக்கான பரிந்துரைகளை மாநில  அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், அமைச்சர்கள், அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.